Monday, June 19, 2006

அன்னையின் கருத்துக்கள்

அன்னையின் கருத்துக்கள்
நோய் வருவது இயற்கை!!அதை எப்படி எதிர்கொண்டு குணமாகலாம் என்பதைக் குறித்த அன்னையின் கருத்தைத் தெரிந்துக் கொள்வோமா!!
நோயை வெல்ல வேண்டும் என்ற மன வைராக்கியத்தை நமக்குள்ளே வளர்த்துக் கொள்ளவேண்டும்! மனதளவில் மட்டுமில்லாமல் உடல் செல்கள் ஒவ்வொன்றிற்கும் அவ்வெண்ணம் வரவேண்டும்!!நூற்றுக் கணக்கான மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ளலாம்!!ஆனால் உடல் சம்பந்தப் பட்ட நோயை வெல்லும் மனத் திட்பம் நமக்கு இல்லை எனில் அம்மருந்துகளால் நம்மை குணப்படுத்த இயலாது!!!

நம்மைப் பிடித்திருக்கும் தீயசக்தியை நாம் அழித்துவிடலாம்!!!எத்தனை ஆயிரம் முறைகள் வேண்டுமானாலும் திரும்பச் திரும்பச் செய்யலாம்!!
நாம் தீயசக்தியை அழிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் வெற்றிடத்தில் வெளியில் இருந்து வேறு தீயசக்திகள் உள்ளே புகுந்து விடும்!!

நோயை வெல்வதற்குறிய தீர்மானமான மன உறுதியை நம்முள் வளர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்!!

இறுதியாக ,
நம் உடல் நலக்குறைவை நேசிக்காமல் இருந்தோமானால் நம் உடல் நலக் குறைவு தானே நம்மை விட்டு விலகி விடும்!!!
ஸ்ரீ அன்னை