Wednesday, July 05, 2006

கால் பந்தாட்டமும் வாழ்க்கையும்


கால் பந்தாட்டமும் வாழ்க்கையும்

தற்போது உலக கால் பந்தாட்டப் போட்டி முடியும் தருவாயில் உள்ளது.எதிர்பாராத விதமாக ஜெர்மனியை வீழ்த்தி இரண்டு கோல் போட்டு இத்தாலி இறுதி சுற்றுக்கு தயராகிவருகிறது.பிரான்ஸின் கதியும் தெரிந்துவிடும்.அதுக்கு இப்போ என்ன என்கிறீர்களா!!
இல்லை அத்துடன் வாழ்க்கையும் கொஞ்சம் பொறுத்தி பார்ப்போம்.

கால் பந்தாட்டத்திற்கு எது தேவை?பந்துதான் கட்டாயம் தேவை!!ஆனால் பந்திற்கு காற்று முக்கியமாயிற்றே!எத்தனை நேரம் பந்தை உதைக்க முடியும்?
காற்றுடன் கூடிய பந்துதான் நம் வாழ்க்கையும்!!காற்று இருக்கும்வரைதான் பந்திற்கு மதிப்பு!
ஆம் பந்துதான் நம் வாழ்க்கை.!
நாம் வாழும் வாழ்க்கைதான் கால்பந்தாட்டம்..
ஒரு பக்கம் நல் இயல்புகள் ஆறு.மறு பக்கம் கெட்ட இயல்புகள் ஆறு!
காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஒரு பக்கம்.
சத்தியம்,தர்மம்,சாந்தி,பிரேமை,அஹிம்சை,பிரகிருதி ஆகியவை மறு பக்கம்.
இரண்டிற்கும் நடுவே இருப்பதே இலக்கு அதாவது GOAL.இரண்டுக்கும் இடையே பந்தை எந்த இலக்கை நோக்கி அடிக்கப் போகிறீர்கள் என்பதுதான் வாழ்க்கை. நல்வழி நோக்கி அடிப்பதா தீய வழி நோக்கி அடிப்பதா இல்லை எங்கு வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா!!

சத்ய சாய்பாபாவின் பக்தை கூறிய கருத்து.

Sunday, July 02, 2006

ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.

ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.
ரெஜினால்ட் பாண்டிச்சேரியுலுள்ள பிம்ஸ் மருத்தவ மனையில் ஒரு டாக்டராக வலம் வருகிறார்.நுனி நாக்கு ஆங்கிலத்தில் அனைவருடனும் அன்புடன் உரையாடும் அவர் காதில் கேட்பதோ தையல் மெஷின் ஓசைதான்.
இதில் என்ன விசேடம் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து உருவான முதல் டாக்டர் ஆவார்.
இலங்கை மன்னார் மாவட்டம் ,நானாட்டான் பகுதி ,யேசுராஜ் விவசாயம் செய்து வந்தவர்.2 மகன் ஒரு மகள் என்று அமைதியும்,மகிழ்ச்சியுமாய் வாழ்ந்த்க் குடும்பம்.பிரச்னை இனப் பிரச்னையுருவில் வந்தது.அகதியாக தமிழகத்தை நோக்கி வந்தது அக்குடும்பம்.இங்கு வந்ததுமே புரிந்தும் கொண்டார்கள்.அரசாங்கம் தரும் சலுகையினால் வயிற்றைக் கழுவமுடியுமேத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று!
அப்போதுதான் தாய் செபஸ்தியம்மா முடிவெடுத்தார் எப்படியாவது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று.
ஆனால் வருமானத்திற்கு என்ன செய்வது.ஆஹா அவர் சிறிய வயதில் கற்றுக் கொண்ட தையல் வேலை கை கொடுத்தது.ஆரம்பத்தில் யாருமே அவரிடம் துணி கொடுக்கவில்லை.பிறகு கடுமையாக போராடி அனைவரது நம்பிக்கையையும் பெற்று வாழ்வில் முதல் டாக்டரை அகதிகள் முகாமில் இருந்து உருவாக்கினார்.
எல்லாவற்றையும் விட கடலூரில்தான் தன் பள்ளிப் படிப்பை முடித்தார்!

இப்போது ரெஜினால்ட் சொல்வதைக் கேட்போமா?

‘’அம்ம மட்டும் எங்களைப் பிடிவாதமாய் படிக்கவைக்கலைன்னா நாங்களும் சும்மா சாப்பிட்டு முகாமில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்திருப்போம்.எங்களை கொஞ்சம் கூட கவலையோ வேதனையோ பட விட மாட்டங்க!அந்த அம்மவின் அக்கரைதான் எங்களை உயர்த்தியது! ‘’
இதை கடந்த இரண்டு நாட்களாக தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்!இருப்பினும் நமது வாழ்த்துக்களை தாய் செபஸ்தியம்மாவிற்கும்,ரெஜினால்டுக்கும் தெரிவிப்போம்!!
வாழ்த்துக்கள்!! செபஸ்தியம்மா!!
வாழ்த்துக்கள் !!ரெஜினால்ட்.!!
இந்தப் பதிவை என் நண்பர் மூலமாக ரெஜினால்டுக்கு அனுப்பப் போகிறேன்!!