Wednesday, July 27, 2016


சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார்...
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று....
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவரிடம்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ? என்று....
அவர் ஓடிப் போய் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்தார.
சுவாமி கேட்டார் நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த சொம்பு.?
சொம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான் அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே.. தண்ணீரைக் கொண்டுவர சொம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம்..!
ஆனாலும் சொம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது

Tuesday, July 12, 2016

📬📧📮🔊🎵📢📠🎙
*🙏🏼க்ருஷ்ணனின் தபால்🙏🏼*
உனது மனது வலிமையானது... எதையும் தாங்கி, எல்லாவற்றையும் தாண்டி ஜெயிக்க உன்னால் முடியும்...
நீயேதான் உன்னை பலவீனமாக நினைக்கிறாய் ! உன் மனதால் நீ கண்ணனையே கட்டிப்போட முடியும் ! மற்ற விஷயங்களை சரி செய்ய முடியாதா என்ன ?!?
*குருஜீ கோபாலவல்லிதாசர்*
📢🔊🎵📮📬📧🎙📠
ராதேக்ருஷ்ணா
முதியோர் இல்லம் . . .
உலகிலே ஒரு நரகம் . . .
 அதுதான் முதியோர் இல்லம் . . .

 
வயதானவர்களை
தண்டிக்கும் ஒரு நரகம் . . .

பெற்றபிள்ளைகளே
பெற்றோரை தண்டிக்கும் ஒரு நரகம் . . .
தூக்கி வளர்த்தவர்களை
வளர்க்கப்பட்டவர்களே
தள்ளிவிடும் ஒரு நரகம் . . .
ஆலமரத்தை விழுதுகளே
ஒதுக்கிவைக்கும் ஒரு நரகம் . . .


உண்ணும்,உடையும்,உறைவிடமும்
தந்தவர்களை உறவுகளே
உதாசீனமாய் வைக்கும் ஒரு நரகம் . . .


கருவறையில் சுமந்தவளை,
சும்மாய் கிட என்று சிசுவே
சிறை வைக்கும் ஒரு நரகம் . . .
நெஞ்சில் சுமந்த தகப்பனை
பிள்ளையே வஞ்சித்து வைத்து
தனிமைப்படுத்தும் ஒரு நரகம் . . .
தாலாட்டு பாடினவளை
வாயார வைது பிள்ளைகளே
தவிக்கவைக்கும் ஒரு நரகம் . . .


தொப்புள்கொடி வழியாக
உணவு,உதிரம்,உயிர்,உடல்
தந்தவளுக்கு மனதில் பாரம்
தந்து நடைப்பிணமாய்
மாற்றும் ஒரு நரகம் . . .


உச்சி முகந்தவளின் எச்சில்
கசந்து அறுவருப்பாகி
உயிரோடு பாடையிலேற்றும்
ஒரு நரகம் முதியோர் இல்லம் . . .


கேட்டதையெல்லாம் தந்த
முட்டாள் தகப்பனை
அறிவு ஜீவி குழந்தைகள்
அஹம்பாவத்தால் தள்ளி
வைக்கும் ஒரு நரகம் . . .


ஐயோ . . .
முதியோர் இல்லங்கள்
இல்லாமல் போகட்டும் . . .


முதியோர் இல்லங்கள்
இருப்பதால்தானே
இந்தப் பாவிகள் பெற்றோர்களை
பாடாய்படுத்துகிறார்கள் . . .

 
வயதான காலத்தில் வேண்டுவது
வெறும் உடலில் சௌகரியம் மட்டுமல்ல !


இளவயதில் தான் தன்
குழந்தைகளுக்குத் தந்த
அன்பை திரும்பவும் அனுபவிக்கவே
வயதானவர்கள் வேண்டுவது !


அன்பைத் தராத இந்தப் பாவிகள்
தாயையும் தந்தையையும்
விஷம் தந்து கொன்றுவிடலாம் . . .



க்ருஷ்ணா . . .
பெற்றோரை முதியோர் இல்லங்களில்
விடும் மஹாபாபிகளை
இங்கேயே,இப்போதே தண்டித்துவிடு !



பெற்றோரை முதியோர் இல்லங்களில்
தள்ளிவிடும் பாபிகளுக்கு
வயதான காலத்தில் எல்லா
கஷ்டங்களும் வந்து சேரும் . . .



இது சாபமல்ல . . .
இது சத்தியம் . . .

இது புலம்பலல்ல  . . .
இது இயற்கையின் சட்டம் . . .

இது கோபமல்ல . . .
இது தர்ம சாஸ்திரம் . . .


Simply love and live your life...
🙏🏼Guruji Gopalavallidasar

161 - க்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை !
"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*
ராதேக்ருஷ்ணா
1. இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது!
2. இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது!
3. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயலின் காரணமும்,செயலும்,செயலின் பலனும் நானே!
4. என்னால் தான் இங்கு எல்லாம் நடக்கின்றது !
5. ஓர் உயிர் ஜனிப்பதற்கும், ஓர் உயிர் மரணம் அடைவதற்கும் காரணம் நானே !
6. மனிதர்கள் தான் என்னும் அகங்காரத்தினால் என்னை மறந்து விடுகின்றனர் !
7. அதனால்தான் என்னால் படைக்கப்பட்டக் காரணமான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல், துக்கத்தில் சிக்குண்டு,அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து அதிலேயே அழிந்து விடுகிறார்கள் !
8. நான் என்னும் அகந்தையை அழித்து என் பாதங்களில் சரணாகதி அடைபவர்களை என்னுடன் நான் அழைத்துக் கொள்கிறேன் !
9. என்னை ஆஸ்ரயிப்பவர்கள் என்னுடன் இரண்டறக் கலந்து, பிறந்ததன் பலனை அடைகிறார்கள் !
10. யாரும்,யாருக்காகவும், வருத்தப்படக்கூடாது. தன்னைப் பற்றி வருந்தவும் அதிகாரம் கிடையாது !
11. ஏனெனில் என்னால் படைக்கப்பட்டு என் விருப்பப்படி நடந்தால் வாழ்க்கையில் துன்பங்கள் என்பதேயில்லை !
12. ஆண், பெண் சங்கமிப்பதற்கும் காரணமும் நானே. அதனால் வரும் ஒரு உயிரின் பிறப்பும் நானே. அதன் அழிவும் நானே !
13. நான் எங்கும் நிறைந்தவன் !
14. என்னை வெளியில் உணர முடியாது. உள்ளிருந்து என்னை உணர்தலே மோக்ஷம். அதை அடைவதே மனிதரின் கடமையாகும்.
15. எந்த நிலையிலும், என்னைத் தியானித்து, என்னை அடைய தாபம் உள்ளவர் மட்டுமே, என்னை அடைய முடியும் !
16. எனது கட்டளைப்படி நடப்பதே உனது கடமை !
17. என்னைச் சரண் அடைந்தவர்களின் பாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் !
18. என்னை உணர்தலே ஞானம் !
19. என்னை அறிதலே வைராக்யம் !
20. என்னுடன் கலப்பதே மோக்ஷம் !
21. என்னை அனுபவிப்பதே பக்தி !
22. நான் மனிதர்களுள் மனிதர்களாக இருக்கிறேன். என்னை கண்டு கொள்ள முடியாது. என்னைப் புரிந்து கொள்ள முடியாது. என் படைப்பின் ரகசியத்தை உணரமுடியாது !
23. அவரவர் பாபத்திற்கேற்ப அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது !
24. நான் மாயையில் மறைந்து உள்ளேன் !
25. நான் யுகங்கள்தோறும் அவதரித்து, மனிதர்களை என்னுடன் கலப்பதற்கான கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன் !
26. நான் என்னும் அகந்தையை அழித்து, என்னை அறிய முற்படுபவபன்தான் தன் கடமையான "என்னை அறிவதைச்" சரிவரச் செய்து என்னுள் சங்கமிக்கிறான் !
27. நான் விளக்கின் ஒளி ! மனிதரின் மூச்சு ! இசையின் ஒலி !
28. நான் பிரணவ மந்திரம் !
29. நான் உலகின் அமைதி !
30. நான் ஆதி அந்தம் இல்லாதவன் ! நான் பிறப்பில்லாதவன் !
31. ஒவ்வொரு பொருளின் ஜீவாதாரம் நான்தான் !
32. என்னை அன்றி இங்கு எதுவும் கிடையாது ! எல்லாம் நானே !
33. பசியும் நானே ! பசிக்கு உணவும் நானே ! அதன் ஜீரணிக்கும் தன்மையும் நானே !
34. நானே ஆசார்யன் ! நானே பக்தன் ! நானே பக்தனாய் அவதரிக்கிறேன் ! நானே குருவாய் இருந்து மக்களை ஆஸ்ரயிக்கிறேன் !
35. என்னை சரண் அடைந்தவர்கள்தான் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் !
36. என்னை சரணாகதி அடைவதே சத்தியம் !
37. உன்னுள் இருந்து உன்னை ஆட்டி வைக்கிறேன்!
38. மனிதர்களால் இங்கு எதுவும் நடக்காது ! எத்தனை முயற்சி செய்தாலும் என் விருப்பமே நடக்கும் !
39. நான் குருவாய் இருந்து என்னை அடையும் வழியை உபதேசிக்கிறேன்! அதைப் பின்பற்றுபவன் என்னை அடைகிறான் !
40. என்னை சந்தேகிப்பவன் என்னை மனிதராய் பார்க்க முடியும் ! ஆனால் என்னைப் பகவானாய் ஆஸ்ரயிப்பவன் என்னை தரிசனம் செய்வான் !
41. என்னை சரண் அடைவதே உலகில் உய்ய வழி !
42. என்னை சரண் அடைந்தால் பாபங்கள் அழியும் ! மோக்ஷம் கிட்டும் !
43. "எல்லாம் நானே" என்றும் இது மாறாது ! இதுவே சத்தியம் ! இதை அறிவதே சுகம் !
44. எல்லாம் என் விருப்பப்படியே நடக்கும் !
45. இயக்கமும் நானே ! இயங்க வைப்பவனும் நானே! இயங்குபவனும் நானே !
46. என் நாமத்தை வாயினால் விளையாட்டாக சொன்னாலே, பலன் உண்டு ! உலகார்ந்த விஷயங்கள் நடக்கும் !
47. என்னை மனதார சிந்திப்பவர்கள் மோக்ஷத்தைப் பெறுவார்கள் !
48. என் விருப்பங்களை உணர்ந்து செயல்படுபவனே என்னை ஆஸ்ரயிக்க முடியும் ! என்னை அனுபவிக்க முடியும் ! என்னை உணர முடியும் !
49. என்னை உணர்பவன் பாக்கியசாலி !
50. என் எண்ணங்களே இங்கு நடக்கின்றன !
51. நானே எல்லாவற்றிற்கும் காரணம் !
52. நானே எல்லாவற்றிற்கும் பதில் !
53. நானே எல்லாவற்றின் தொடக்கம் !
54. நானே எல்லாவற்றின் முடிவு !
55. நானே எல்லாமாகி உள்ளேன் !
56. நானே கண்ணின் ஒளி !
57. நானே செவியின் கேட்கும் திறன் !
58. நானே வாயின்வழியே பேசுகிறேன் !
59. நானே நாக்காக ருசிக்கிறேன் !
60. நானே உடலாய் இருக்கிறேன் !
61. நானே மோகம் !
62. நானே காமம் !
63. நானே சங்கமம் !
64. நானே ஜனிக்கிறேன் !
65. நானே மறைந்து பிறக்கிறேன் !
66. நானே யுகம் !நானே அவதார புருஷன் !
67. நானே காற்று;நானே நீர்;நானே நிலம்;நானே ஆகாசம்;
68. நானே சொர்க்கம்;நானே மோக்ஷம்;நானே புண்ணியம்;நானே அனைத்து ஜீவராசிகள் !
69. நானே சர்வம் !
70. என் குரல் எப்போதும் ஒளித்துக் கொண்டேயிருக்கும். என் குரலை கேட்க என்னையே அடையவேண்டும்.என்னை அடைந்தாலே என்னை உணரமுடியும்.
71. நானே யோகம் ; நானே பக்தி ; நானே நாமஸ்மரணம் ; நானே சந்தோஷம் !
72. அஞ்ஞானமும் நானே ! விஞ்ஞானமும் நானே ! மெய்ஞானமும் நானே !
73. அஞ்ஞானம் - என்னை உணராதது !
74. விஞ்ஞானம் - என்னால் வளருவது !
75. மெய்ஞானம் - என்னை உணர்ந்து அனுபவிப்பது!
76. என்னை அறிந்தால் எல்லாம் புரியும் ! எல்லாம் விளங்கும் !
77. நான் என் கடமையை செய்து கொண்டே இருக்கிறேன் !
78. உன் கடமை நான் சொல்வதைக் கேட்டு நடப்பதே!
79. என்னை முழுவதுமாக நம்பு ! சஞ்சலப்படாதே ! சந்தேகப்படாதே ! என்னை நம்பு ! என்னிடம் சரணாகதி அடை !
80. நானே உன்னைக் காப்பாற்றுகின்றேன் !
81. நானே உனது எல்லாம் !
82. நானே கைகளாய் இருந்து வேலைகளைச் செய்கிறேன் ! நானே கால்களாய் இருந்து நடக்கிறேன் !
83. நானே உணர்வு !
84. நானே வளர்கின்றேன்; நானே அழிகின்றேன்; நானே தோன்றுகின்றேன் :
85. அதனால் நீ தோற்றுவிப்பதில்லை ; நீ அழிப்பதில்லை ; நீ வளர்ப்பதில்லை ; அதனால் அகங்காரம் வேண்டாம் !
86. நானே ஓம்காரம் ! நானே தொடங்கி, நானே வளர்ந்து, நானே அடங்குகின்றேன் !
87. இதில் உன்னுடையது எதுவும் இல்லை !
88. நானே கொடுக்கிறேன் ! நானே எடுத்துக்கொள்கிறேன் !
89. நானே இசை ! நானே நாடகம் ! நானே கதாபாத்திரம் !நானே இயக்கம் ! நானே நாடகம் காரணம் ! நானே நடிப்பவன் !நானே முடிப்பவன் !
90. நானே அவதரித்து கொண்டேயிருக்கிறேன் ! நான் இருக்கிறேன் ! நான் இருந்து காக்கிறேன் ! நான் நடத்தி வைக்கிறேன் !
91. நானே இங்கு அனைத்துமாகி, அனைத்திலும் இல்லாததுமாகி, எங்கும் நிறைந்து, உன்னுள் இருந்து உன்னை வழிபடுத்துகிறேன் !
92. உனது என்னும் மாயைக் கொடுப்பவன் நானே ! அதை அழித்து என்னுடையது என்பதை கொடுப்பவனும் நானே !
93. என்னை ஏமாற்ற முடியாது ! என்னை ஏமாற்ற நினைப்பவன் ஏமாறுகின்றான் ! ஏமாற்றப்படுகிறான் !
94. நானே சூரிய சந்திரன் !நானே நக்ஷத்திரங்கள் ! நானே பூவுலகம் ! நானே விண்வெளி ! நானே சாகரம் !
95. நானே வண்ணம் ! நானே உயிர் ! நானே ஆன்மா ! நானே வாழ்க்கை ! நானே இறுதி ! நானே தோற்றம் !
96. நானே பொக்கிஷம் ! நானே பக்தி ! நானே மோக்ஷம் !
97. நானே அழகு ! நானே தனம் !நானே கோபி !
98. நானே ஆண் ! நானே பெண் ! நானே குழந்தை ! நானே வித்து ! நானே விந்து !
99. நானே சக்தி ! நானே நெருப்பு ! நானே பகல் ! நானே இரவு !
100. நானே இங்கு ! என்னைத்தவிர வேறொன்றுமில்லை !
101. ஆதலால் என்னைச் சரணடைந்து, என்னை உணர்ந்து, என்னுடன் வாழ்ந்து சந்தோஷித்து, என்னை அடை ! என்னுடன் கலந்து விடு ! ! !
இதுவே அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்,
இந்த குருஜீ அம்மாவின் சிஷ்யனுக்கு முதன் முதலில் தன் திருவாய் மலர்ந்தருளின தமிழ் கீதை!
இதைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிரு!
பல வாழ்க்கை ரகசியங்கள் தெளிவாகப் புரியும் !
இன்னும் பக்தியில் ஆழத்தை அனுபவிப்பாய் !
க்ருஷ்ணனுடையக் குரலைக் கேட்பதே ஆனந்தம் !
அதிலும் அவன் வாயால் கீதை கேட்பது பரமானந்தம்!
இதை எல்லாம் தந்த என் குருஜீ அம்மாவுக்கு கோடானு கோடி வந்தனங்கள் ! ! !
ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா !
ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா சத் சங்கம் !
ஜெய் ஸ்ரீ பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மா !
இந்த கீதை என் குருஜீ அம்மா கட்டளைப்படி ,
விளையாட்டுத்தனமாக நாம ஜபம் செய்ததற்கு
க்ருஷ்ணன் இந்த ஜந்துவிற்குக் கருணையினால்
போட்ட பிச்சை . . .
கோடி ஜன்மா ஆனாலும் இதற்கு அடியேன் நன்றிக் கடன் பட்டவன் ! என்ன செய்தாலும் இந்தக் கடன் தீராது ! தீரவும் வேண்டாம் !
நீயும் விடாமல் நாம ஜபம் செய்ய க்ருஷ்ணன் உன்னிடம் பேசுவதை நீயும் சத்தியமாகக் கேட்பாய்!
ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா!
Read more: http://vedhaththamizh.blogspot.in/2009/12/blog-post_12.html
Under Creative Commons License: Attribution
குருஜீ கோபாலவல்லிதாசர்
🍃🖋ஆனந்தவேதம்🍂✍🏻
🍂🖋ஆனந்தவேதம்✍🏻🍃
162 - இதில் என்ன தப்பு . . .
"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*
ராதேக்ருஷ்ணா

முயற்சிக்காதே . . .
ஒரு நாளும் முயற்சிக்காதே . . .
நீ சிறந்த பக்தன்/பக்தை
என்று உலகில் நிரூபிக்க
ஒரு நாளும் முயற்சிக்காதே . . .

பக்தி என்பது உனது
தனிப்பட்ட விஷயம் . . .

அதில் அடுத்தவருக்கு
ஒரு சம்மந்தமும் இல்லை . . .

கடவுளை நம்புவதும்,
நம்பாதிருப்பதும் அவரவர்
மனது,காலம்,வாழ்க்கையைப்
பொறுத்து அமைகிறது . . .

முதலில் நம்பாதவர்
பிறகு நம்புவதும் உண்டு ! ! !

முதலில் நம்பினவர்
பிறகு சந்தேகிப்பதும் உண்டு ! ! !

பக்தி என்பது குழந்தையின்
இனம் புரியாத சந்தோஷம் போன்றது !

ஒரு குழந்தையின் சந்தோஷத்தை
யாராலும் உள்ளபடி சொல்லவேமுடியாது !

ஒரு குழந்தையின் சந்தோஷத்தின்
காரணத்தை கண்டுபிடிப்பதும் கஷ்டம் !

குழந்தை தன் மனதைக் கொண்டு
தன் சந்தோஷத்தை அனுபவிக்கிறது !

அதுபோலே பக்தன்/பக்தை
தன் மனதினால் சந்தோஷத்தை
அனுபவிக்கிறார் . . .

இதில் என்ன தப்பு . . .

பக்தியைப் பற்றி
தெரியாதவர்களுக்கு இதில் என்ன கவலை ?

நாஸ்தீகர்களுக்கு
இதில் ஏன் பொறாமை ?

விஞ்ஞானி தன் ஆராய்ச்சியில்
சந்தோஷம் காண்கிறான் . . .

சம்சாரி தன் குடும்பத்தில்
சந்தோஷம் காண்கிறான் . . .

குடிகாரன் போதையில்
சந்தோஷம் காண்கிறான் . . .

குழந்தை பொம்மையில்
சந்தோஷம் காண்கிறது . . .

இளவயது உடலுறவில்
சந்தோஷம் காண்கிறது . . .

முதியவயது அக்கறையில்
சந்தோஷம் காண்கிறது . . .

திருடன் திருட்டில்
சந்தோஷம் காண்கிறான் . . .

இப்படி ஒவ்வொருவரும்
ஏதோ ஒன்றில் சந்தோஷம்
அடைகிறார்கள் . . .

அது போலே பக்தரும் பக்தியில் . . .

இதில் என்ன குற்றம் . . .
இதில் என்ன பைத்தியக்காரத்தனம் . . .
இதில் என்ன மூடத்தனம் . . .
நீ உன் பக்தியை அனுபவி . . .
மற்றவற்றை ஒதுக்கித் தள்ளு . . .