Thursday, October 01, 2015

நாம ஜபம்



 
உங்களிடம்  ஆசையோடு சொல்ல விரும்புகிறேன் ...கொஞ்சம் கேளுங்களேன்....எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் உங்கள் உள்ளத்து உணர்வில் சதா இறையுணர்வு இருக்கட்டும்...திடிரென்று அந்த உணர்வு மறந்து போகலாம்..ஞாபகம் வந்தவுடன் மீண்டும் அந்த இறைவுணர்வை பிடித்து கொள்ளுங்கள்.மறப்பதும் பிறகு பிடிப்பதும் சில காலம் தொடரலாம்...பின்பு இறையுணர்வு ஒரு கட்டத்தில் அதுவாகவே உங்களுக்குள் நிற்க தொடங்கிவிடும்....நீங்கள் ஆச்சரியபடுவீர்கள்...ஏனென்றால் மனம் சதாஅமைதியில் இருந்து கொண்டிருக்கும்...இறையுணர்வு உங்கள் இச்சையில்லாமலே உங்கள் உள்ளத்தை கருணையினாலேயே நிரப்பி கொண்டிருக்கும்....எல்லாவற்றையும் துச்சமாக தூக்கி எறியும் மனம் தானாகவே எழும்....தேவைக்கு மேலே மனம் ஆசைவயபடாது...தேவையாய் இருப்பதெல்லாம் கூட மற்றவர்க்கு வாரி வழங்கிவிட மனம் தூண்டும்....இந்த முட்டாள் மனிதன் கார்த்தியிடமும் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது நண்பர்களே....! நான் மேலும் ஒன்று சொல்லட்டுமா ....இறையுணர்வு கடினமாக தோன்றினால் நாம ஜெபம் செய்தபடி வெளி வேலையில் ஈடுபடுங்கள்....இங்கு பாருங்கள் என்னை...ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டே இருக்கிறேன்...மரணம் என்னை நெருங்கி வருவதால்....இந்த வாழ்க்கை நெருப்பின்மேல் நிற்பது போல் எனக்கு பற்றி எரிகிறது...காலம் நிரந்தரமில்லை.....இந்த உடலும் இருந்து கொண்டிருக்கும்...இறையுணர்வு உங்கள் இச்சையில்லாமலே உங்கள் உள்ளத்தை கருணையினாலேயே நிரப்பி கொண்டிருக்கும்....எல்லாவற்றையும் துச்சமாக தூக்கி எறியும் மனம் தானாகவே எழும்....தேவைக்கு மேலே மனம் ஆசைவயபடாது...தேவையாய் இருப்பதெல்லாம் கூட மற்றவர்க்கு வாரி வழங்கிவிட மனம் தூண்டும்....இந்த மனிதன் இடமும் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது நண்பர்களே....! நான் மேலும் ஒன்று சொல்லட்டுமா ....இறையுணர்வு கடினமாக தோன்றினால் நாம ஜெபம் செய்தபடி வெளி வேலையில் ஈடுபடுங்கள்....இங்கு பாருங்கள் என்னை...ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டே இருக்கிறேன்...மரணம் என்னை நெருங்கி வருவதால்....இந்த வாழ்க்கை நெருப்பின்மேல் நிற்பது போல் எனக்கு பற்றி எரிகிறது...காலம் நிரந்தரமில்லை.....இந்த உடலும் நிரந்தரமில்லை...நாம ஜெபம் செய்து பவகடலிலிருந்து மீள கண்ணீரோடு அவன் அருளை பெற அவன் திருப்பாதங்களை பிடித்து பிச்சையெடுப்போம்....அவனுக்கு மட்டுமே நாம் கேட்பதை பிச்சையிட சகல அதிகாரங்களும் உண்டு.....!!! காலம் கடத்த வேண்டாமே...அதற்குள் எத்தனை பிறப்பிறப்பிற்குள் மூழ்கி எழ நேரிடுமோ......பகவானே....இந்த படுபாவியை எப்படியாவது கரையேற்றி விடு...........!!!!!