Saturday, January 21, 2006

real to accept

கற்றோரைக் கற்றோரேக் கற்றோரேக் காமுறுவர்

நல்லோரைக் காண்பதும் நன்றே நல்லோர் சொல் கேட்பதும் நன்றே

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை!

முனிவிலும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்கனவிலும் நல்கார் கயவர்,நனிவிளைவில் காயினும் ஆகும் காதலிதான் எட்டிப்பழுத்தாயினும் ஆமோ அறை!
பந்தலின் முகப்பில் வாழையினைக் கட்டுகிறோம் வாழையடி வாழையாக வாழவேண்டுமென்று!இவ்வாழையைக் குறித்து சிறிது சிந்திப்போமா!

வாழைத் தன்னை வெட்டுபவருக்கும் காயாக இருந்தாலும் பலன் தருகிறது!

பழுத்தால்தான் பயன் தரும் என்றில்லை!பூ,பிஞ்சு,காய்,கனி ,இலை,தண்டு,மட்டை என்று பயன்கள் ஏராளம்.இப்போது எட்டி மரத்தை பார்ப்போமா!எட்டி மரம் காய் என்றில்லை ,பழமாக இருந்தாலும் மக்களுக்கு பயன்படுவதில்லை.!

நல்லோர்கள் எத்துனை துன்பம் ஏற்படினும் அறநெறியிலிருந்து வழுவார்.செய்யத்தகாதவற்றை செய்யார்.சொல்லத் தகாதன சொல்லார்.நினைக்க ஒண்ணாதவற்றை நினையார்.

நல்லாற்றொழுக்கின் தலை நின்றார் நல்கூர்ந்தும் அல்லன்செய்தற் கொருப்பார் பற்பொழிய

செங்கட் புவியேற்றப் பசித்தும் தின்னாவாம்

பைங்கட் புனத்த பைங்கூழ்.

சந்தனம் அரைத்தாலும் மணம் கமிழும்,அகில் புகைத்தாலும் கமழும்,சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.எத்துனைத் துன்பம் நேரினும் நல்லோர் தங்கள் தகுதியினின்றும் குறைவு படார்!கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

இன்னாசெய்தாருக்கும் இனியவையே செய்யும் சார்பு படைத்தவர் நல்லோர்.

தம்மை அவமதிக்க வந்த மிகக் கொடியவர்களாகிய துரியோதனன் முதலியோரை த் தருமர் வனத்தின் இடையில் வரவேற்று இன்னுரைப் பகர்ந்தார்!அறிவுரை கூறினார்.!குபேரன் தனக்கு அளித்த ஆடை,அணிகலன்களை அளித்து இன்முகத்துடன் உபசரித்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

தீர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும்

சிந்தை பேரருளாள்ற்தத்ஞ் செய்கையில் பிழைப்ப்

துண்டோகார்வரை நிறுவித் தன்னைக் கணலெழக் கலக்கக் கண்டும்

ஆர்கலி அமருய்ய அமுது பண்டளித்தே தன்றே.

தேவர்கள் இனிய பாற்கடலில் மந்திர மலையை விடுத்து கடலை கலக்கி துன்புற்த்தினர்.பாற்கடலோ அவர்களுக்கு அமுதத்தை அல்லவா அள்ளித் தந்தது.

நல்லோர் என்போர் அகிலாண்டக் கோடி பிரமாண்ட நாயகன் உள்ளத்தில் எழுந்தருளினால் எத்தகையப் பேறுக்கிடைத்திடுமோ அதைப் போலத் தன்மை உடையவர். நல்லோர் ,பொன், பொருள் ,நிலம் ,ஆடை யாவும் விண்மீனுக்கு ஒப்பகும்.சூரியனானது வானத்தில் ஒளிர்ந்து உலகை ஒளிமயமாக்குவதுப் போல் நல்லோர் உலகை வழி நடத்திச் செல்லும் உத்தமர்கள்.நல்லோர்களின் பாதச்சுவடைப் பின் பற்றி நாமும் நல்லோராக அவர்களின் வழி நின்று மிளிர்வோம்.!

"நல்லோரின் சேர்க்கை புத்தியில் மந்தத்தைப் போக்குகிறது.பேச்சில் உண்மையை வரவழைக்கிறது.மேலான கௌரவத்தைக் கொடுக்கின்றது.பாபத்தை போக்கும்.குறிப்பாக மனதைத் தெளிவாக்கும்.பல திக்குகளில் புகழைப் பரப்பும்.நல்லோர்களின் சேர்க்கை எதைதான் கொடுக்கவில்லை!என்பது பெரியோரின் வாக்கு!"

10 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு நடேசன்,
ஊண்மை. உண்மை. முக்காலும் உண்மை.
ஆனால் அந்தக் கால்பங்கு ?

பாற்கடலில் அமுதம் நஞ்சும் ஒருசேரக்கிட்டியது. அதைக் கண்ணன் பகிர்ந்தளித்தான். அதுபோல், நல்லவர்களிலும், ஆன்றோர்களினிடையே ஊடுருவிக் கிடக்கும் பொல்லாங்கு தேடுவோரை வகைகண்டு ஒதுங்கி வாழுதல் நன்று.

Anonymous said...

யார் நல்லவர் தீயவர் என்று எப்படி அறிவது?

ஸ்ரீ said...

ஆனால் இந்த கலியுகத்தில் நல்லோர்களையும் அல்லாதோரையும் அறிதல் கடினமே.

NambikkaiRAMA said...

நமது ஞானக்குறள் அய்யா ஞானவெட்டியான் அவர்களிடமே பாராட்டு வாங்கி விட்டீர்கள். நல்ல கருத்து திரு. நடேசன்!

NambikkaiRAMA said...

அய்யா ஞானவெட்டியான் அவர்களே தங்களை பாராட்டி விட்டார். நல்ல கருத்து நடேசன். நன்றி!

மதுமிதா said...

அன்பு நடேசன்

இப்போது ஒத்துக் கொள்கிறீர்களா பதிவினை பார்த்தாச்சு இன்று.

'காற்றுவெளி' பதிவில் நீங்கள் கமெண்ட் இடும்போது உங்கள் பெயரில் க்ளிக் செய்தால் இந்த பதிவுக்கு வர இயலவில்லை.அதனால் உங்கள் பதிவு எனக்கு தெரியவில்லை.

பார்த்தீர்களா அன்னை குறித்து சொன்னவுடன் வந்துவிட்டேன்.

நல்லோரின் சேர்க்கை குறித்து இது போன்றே பர்த்ருஹரியும் உயர்வாய் சொல்வார்.சொல்லி முடிக்கையில் இப்படி கத்தியின் மேல் நடக்கும் வித்தையினை இவருக்கு கற்றுத்தந்தது யார் என்று முடிப்பார்.

சரி நமது தோழர்கள்,தோழிகள் அனைவருக்கும் எனதன்பைத் தெரிவியுங்கள் .

rnatesan said...

மிக்க நன்றி உங்களுக்கு,
நாங்கள் தங்கள் பதிவைப் பார்த்துக் கொண்டும்,சில விபரங்களை விவாதம் செய்தும் கொண்டும்தான் உள்ளோம்!!

ENNAR said...

நண்பர் நடேசன் அருமையான கருத்துக்களை அள்ளி வீசி விட்டீர்கள் பாராட்டுக்கள் பல

மஞ்சூர் ராசா said...

ஏதோ பூவோடு சேந்து நாரும் மணக்கும்ங்கற மாதிரி உங்களோட சேந்து ஏதோ நாலு நல்லதை கத்துக்கலாம்னுதான் இந்த பக்கம் வந்தோமுங்க.

சரி, ஒத்துக்கறேன்.

பெரியவங்க பேசும்போது ஒரு ஓரமா ஒதுங்கி நின்னு எல்லாத்தையும் பாத்துகிட்டிருக்கேன்.

rnatesan said...

ஞானவெட்டியான்,ஷீரீ கோபி,என்னார்,ராமன் பாபு,நெட் சீ அனிதா,மதுமிதா மேடம் மஞ்சூரார் அனைவருக்கும் மிக்க நன்றி,நன்றி!!!!!