Saturday, April 01, 2006

ஞானவெட்டியான் அய்யாவுடன் ஒரு சந்திப்பு!!

ஞான வெட்டியான் அய்யாவுடன் ஒரு சிறிய சந்திப்பு
சில நாட்களாக பர பரப்பாக பேசப்பட்ட ஞான வெட்டியான் அய்யா நேற்று மதியம் என்னுடன் தொலை பேசியில் உடன் சிதம்பரம் வர அழைத்தார்! அலுவல் காரணமாக இன்றுதான் செல்லமுடிந்தது!!
இன்று அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது பயத்தில்தான்!!எங்கே மீசைக்காரரை சந்திப்பதில் தாமதம் ஆகிவிடுமோ என்று!!
பேருந்தில் ஒண்றரை மணி நேர பயணம்!!சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சிறிது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!!நான் நினைத்தது அவர் பயணக் களைப்பில் தூங்கிக் கொண்டிருப்பார் ,எனவே தொந்தரவு செய்யவேண்டாம் என்று!!மெதுவாக அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்!!அங்கே தெரு முணையிலேயே ஆஹா!! நமது அய்யாதான்!!காலை 6 மணியிலுருந்தே எனக்காக தெரு முணையிலேயே காத்துள்ளார்!!!
பிறகு அய்யா,அய்யாவின் துணைவியார் ஜெயலக்ஷ்மி அம்மாள் மற்றும் அவரது வளர்ப்பு மகள் சித்ரா, ஒட்டுனர் ரமேஷ் ஆகியோருடன் சிதம்பரம் அம்பலத்தரசன் நடராசனின் ஆலயத்தை சென்றடைந்தோம்.
திவ்ய தரிசனம்!!பொன்னம்பலம்,சிதம்பர ரகஸியம் ஆகியவற்றை மெய்மறந்து தரிசித்தோம்!!
சிவகாம சுந்தரி ,கைலாஸநாதரை லிங்கதரிசனத்துடன் ,கால பைரவர் சூரிய பகவான் அவர்களை வணங்கி வந்தோம்!!
ஆனால் ஒரு வருத்தம் சிதம்பரம் கோயிலில் பொதுமக்கள் சிலர் செய்யும் அசிங்கம் ,மற்றும் தீஷிதர்களின் பணம் வசூல் செய்யும் போக்கு அப்படியேத்தான் உள்ளது!!
பின்பு வெளியே கிரிஷ்ன மாமாஹோட்டலில் ஒரு பிடி பிடித்தோம்!!
நேற்று மதியம்தான் சிதம்பரத்திற்கே வந்துள்ளார்!! அதற்குள் கிரிஷ்ண மாமா, அம்பி ஆகியோர் அவரை பயங்கரமாக உபசரித்தனர்!! மதியம் சாப்பிட வந்துடுங்கோ என்ற அன்புக் கட்டளை வேறு!!
ஜெயலக்ஷ்மி அம்மா ஒரு அன்பு நிறைந்த குணவதி!! என்னை மற்றத் தலங்களுக்கும் வரும்மாறு கட்டளையிட்டார்!!
திண்டுக்கல் வர அழைப்பு விடுத்தார்!!
அவர் மகள் சித்ரா அடக்கம் ,நகைச்சுவை உணர்வு உடையவர்!!
நம்பிக்கை ராமர் காசிக்கு வழியனுப்பியதை அய்யா நினைவு கூர்ந்தார்!
மன்சூர் ராஜா,சிவசங்கர்,விஜி அம்மணி ,விழியா மற்றும் அனைவரையும் நினைவு கூர்ந்தார்!!
11 மணி அளவில் நடராஜர் ,மற்றும் ஞானம் அய்யாவின் தரிசனம் முடிந்து கடலூர்
திரும்பினேன்!

மன்னிக்க!!அவ்வளவு அவசரமா போட்டோ எல்லாம் போடமுடியுமா!!அய்யா ஊருக்குப் போய் அனுப்பறேன் என்று சொல்லியுள்ளார்!! அப்போது போடுகிறேன்!!இன்னக்கி ஏப்ரல் 1 பாருங்க!!!!!): (: ):

3 comments:

Anonymous said...

article also april fool or fotos only!!

ஞானவெட்டியான் said...

இப்பதிவு யாரையும் முட்டாளாக்க அல்ல.
இது உண்மை.
முக்காலும் உண்மை.
குழந்தை உள்ளம் கொண்ட நண்பர் நடேசனை சந்தித்ததில் அகமகிழ்ந்தேன்.

rnatesan said...

அய்யா,கோவிச்சுக்காதிங்க!!நம்ம பொண்ணுதான்!! ஏப்ரல் முட்டாளாக்கிட்டேன் என்றுகோபம்!!