Saturday, September 01, 2018

நாமதேவர்:

 நாமதேவர் , சந்திரபாகா நதிதீரத்திலேயே அமர்ந்து பஜனை செய்துகொண்டிருந்த 
பொழுது , ஒரு நாய்அவருக்காக
 அவர் மனைவி , வைத்துச் சென்ற  ரொட்டியை , கவ்விக் கொண்டு ஓடிவிட்டது .
 அதைக்கண்ட நாமதேவர் அதன் பின் ஓடிய படியே , " பாண்டுரங்கா .இந்த நெய்யையும் சர்கரையும் ,  ரொட்டியுடன்
 சேர்ந்து சாப்பிடு " என்று நாயை பிடிக்க முயன்ற போது , அங்கு நாய் மறைந்து ,
 பாண்டுரங்கனே ,அவருக்கு தரிசனம் தந்தார் .
இதே போல்  ஏகநாதரும் . காசியிலிருந்து ,ஸமாராதனைக்காக , எடுத்து செல்லும்
 காங்கா  ஜலத்தை , சாகும் தருவாயில் இருந்த ஒரு கழுதைக்குகொடுத்தார் . அப்போது
 அங்கு கழுதை , மறைந்து
ஏகநாதருக்கு பாண்டுரங்கனின் தரிசனம் கிடைத்தது.
   ஜீவன்கள் படும் அவஸ்தையை , கண்டு மஹான்களால் , பரிதவிக்காமல் இருக்க
 முடியாது .
இதைதான் பகவான் " ஸர்வபூத ஹிதோரத " என்கின்றான்  அதாவது ,   அவர்கள் எல்லாவற்றிலும் 
பகவானையே பார்க்க அத்தகையோர்  என்னையே அடைகிறார்கள் என்கிறான்
 பகவான் கிருஷ்ணன்..
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!

No comments: