Saturday, October 25, 2008

ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள்


ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!!
ஒரு புரட்டாசி சனியன்று புகழ் பெற்ற திருவஹீந்திபுரம் பெருமாள் ஆலயத்திற்கு சென்று இருந்தேன்.
அங்கு ராமக்ரிஷ்ண ஹரி என்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் தன் குழுவினருடன் கலியுகத்தில் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் மற்றும் பாவம் தீர வழி ஆகியவைக் குறித்தும் விளக்கி ஒரு சிறியக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றையும் அற்புதமாக நடத்தினார்..
நான் அவரிடம் அதற்கு அடுத்த சனிக்கிழமை எங்கள் நகரில் உள்ள கும்பாபிஷேகம் முடிந்து மண்டாலபிஷேகம் நடந்து வரும் கற்பக விநாயக ஆலயத்திற்கு அழைதேன்.
அவரும் மறக்காமல் சிஷ்யர்கள் முரளீ மற்றும் கிருஷ்ண் மூர்த்தி தாஸ் ஆகிய இருவரையும் அனுப்பி எங்கள் மண்டல பூசையை சிறப்பிக்கச் செய்தார்..
ராம நாமமும் ,திவ்ய நாமமும் எல்லோர் மனதிலும் ஒலித்தது!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே!


No comments: