Thursday, December 08, 2005

அவரவர்க்கு அவரது துயரம்.

இதோ நமது முந்திரி மரம் தனது துயரத்தை கூறாது கூறுகிறதே!அன்புடையீர்,கடும் மழை ,வெள்ளத்தில் தப்பித்து பிழைத்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றோம்.திரும்பித்தான் ஆக வேண்டும்.வீடுகளில் சேதம்,நிலங்களில் பயிர்கள் அழுகியதைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது.கடும் மழை ,வெள்ளத்தில் தப்பித்து பிழைத்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றோம்.திரும்பித்தான் ஆக வேண்டும்.வீடுகளில் சேதம்,நிலங்களில் பயிர்கள் அழுகியதைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது.தொழிற்சாலைகள் அடைந்த சேத்ங்கள் அதிகம் எனினும் தினசரி தொழிளர்கள் ஊதியமின்றி பட்டவேதனைகளை வார்ததையில் வர்ணிக்க இயலாது.இத்துயர நேரத்தில் இரவு பணியிலிருந்து லேட்டாக வந்து எப்படியும் வீட்டை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஆபத்தை அறியாது புதிதாக கட்டப்பட்டுகொன்டிருக்கும் பாலத்தில் ஆழம் அறியாது உயிரை விட்ட நண்பரின் குடூம்பத்தினர்க்கு ஆறுதல் தருபவர் யார்?
திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பது சான்றோர் வாக்கு.இறைவா எங்களுக்கு பொன்னும் பொருளும் வேண்டாம்.உழைப்பதற்கு ஆரோக்கியத்தை தா,போதும் என்ற மனதினை தா,உன் மீது நாங்கள் வைத்திருக்கும் ந்ம்பிக்கைய என்றென்றும் குலைத்து விடாதே!

1 comment:

Anonymous said...

donot worry!mother is with you!